கீழடியில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லையா? - சாமானிய மக்கள் கடும் அவதி

x

உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான கீழடியில் பேருந்து நிறுத்தம் அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழரின் வரலாற்றை உலகறியச் செய்த கீழடியில், ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லாதது மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்கள் சென்று பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலை நடுவே தீவு திடல் ஏற்படுத்தி அதன் அருகிலேயே பேருந்து நிலையம் அமைத்துத் தர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்