தஞ்சை - விபத்தில் இளைஞர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி சிசிடிவி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனியார் பள்ளி வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகளை காண்போம்...
ஒரத்தநாடு அருகே தென்னமநாடு பகுதியில், மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாகத் திரும்பிய பள்ளி வேன் மீது மோதி விபத்து நேரிட்டுள்ளது.
இதில் பாண்டி மற்றும் பிரபாகரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், படுகாயமடைந்த நிரஞ்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
