கோவில் திருவிழா..! இருதரப்பினர் கடும் தள்ளுமுள்ளு..! திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காளியம்மன் கோவில் சப்பரம் கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு கொண்டு வந்ததாக, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த‌தால், போலீசார் 3 மணி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரதம் கோவிலுக்கு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்