Tasmac | டாஸ்மாக்கை அகற்றக் கோரி ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்..சாலையில் அமர்ந்து திடீர் போரட்டம்

Tasmac | டாஸ்மாக்கை அகற்றக் கோரி ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்..சாலையில் அமர்ந்து திடீர் போரட்டம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கிராமத்தில், அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை முற்றுகையிட முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி, ஒப்பாரி வைத்து அழுதபடி டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

X

Thanthi TV
www.thanthitv.com