Tasmac டாஸ்மாக் கடைகள் திடீர் அடைப்பு - தவித்த மதுபிரியர்கள் செய்த காரியம்... குவிக்கப்பட்ட போலீஸ்
டாஸ்மாக் கடைகள் திடீர் அடைப்பு - தவித்த மதுபிரியர்கள் செய்த காரியம்... குவிக்கப்பட்ட போலீஸ் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, நெல்லையில் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுபிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், மதுபானம் வாங்குவதற்காக தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் மதுபிரியர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க பல இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் 165 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் பாட்டில், தனியார் பார்களில் தட்டுப்பாடு காரணமாக 210 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
