மாணவர்கள் கவனத்திற்கு - வெளியான முக்கிய அப்டேட்

x

தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிய பாட புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் அடுத்து வரக்கூடிய நாட்களில் விற்பனைக்கு வந்து விடும் என கூறியுள்ளது. மேலும், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காக 5 கோடி நோட்டு, புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்