சென்னையில் உள்ள இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் மார்கழி மாத இசை திருவிழாவை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எழும்பூர் அருங்காட்சியகத்தை உலக தரத்தில் உயர்திட 12 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்த சில தகவல்களையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.