ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழக்கு : வேறு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் தண்ணீர் சப்ளை செய்ததால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. வை சேர்ந்த ஜோயல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழக்கு : வேறு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் தண்ணீர் சப்ளை செய்ததால் தமிழக அரசுக்கு, 4 ஆயிரத்து 566 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிறப்பு புலன் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரியும், தி.மு.க. வை சேர்ந்த ஜோயல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி தஹில ரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com