

நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த ரயில் அட்டவணைப்படி, பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், தாம்பரம்-நெல்லை அந்தியோதியா ரயில், பாண்டியன் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில் உள்ளிட்ட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கவுகாத்தி மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சி-நாகூர் விரைவு பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 8.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு புறப்படும் என்றும்,
சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு - கச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.00 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என்று புதிய ரயில்வே அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.