Smart Classroom | ரூ.22 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஒரே அடியாக மாறிய அரசு பள்ளி
ரூ.22 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஒரே அடியாக மாறிய அரசு பள்ளி
Govt School Smart Classroom | ரூ.22 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஒரே அடியாக மாறிய அரசு பள்ளி ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை போர்டுகள் திறந்து வைக்கப்பட்டன. 2100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில், ஓசூர் பகுதியில் செயல்படும் நான்கு தனியார் நிறுவனங்களின் CSR நிதியுதவியுடன் 22 ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, ஸ்மார்ட் வகுப்பறை போர்டுகளை திறந்து வைத்தார்.
