"ஆற்றில் கலக்கும் கழிவு நீர் : பொதுமக்கள், கால்நடைகள் அவதி"

மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
"ஆற்றில் கலக்கும் கழிவு நீர் : பொதுமக்கள், கால்நடைகள் அவதி"
Published on
கால்வாய் தண்ணீரில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை நகரத்தில் உள்ள நயினார்குளம் நிறைந்து, உபரி நீர், நெல்லை கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் கீழே, குழாய்கள் மூலம் நெல்லை நகர பாதாள சாக்கடை கழிவு கொண்டு செல்லப்படும் நிலையில், கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் கலந்து, 5 ஆயிரம் ஏக்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும், கால்நடைகளும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com