மழைநீரோடு கலந்த கழிவு நீர் - தீவுகள் போல் தெரியும் வீடுகள்-அதிகாரிகளை Left, Right வாங்கிய மதிமுக MLA

x

மதுரையில், குடியிருப்பு பகுதியை மழை நீர் மற்றும் கழிவு நீர் சூழ்ந்து கொண்டதால், மாநகராட்சி அதிகாரிகளை மதிமுக சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் கடிந்து கொண்டார். மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதி 46 வது வார்டில் மழை நீர் தேங்கியது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த எம்எல்ஏ பூமிநாதன், மாநகராட்சி அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் சீரமைக்க அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்