Sathankulam Case | 6 ஆண்டு காத்திருப்பு.. சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்புக்கு நாள் குறித்த கோர்ட்

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். 2020-ஆம் ஆண்டு போலீஸ் தாக்குதலால் இருவரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் ஆஜரான இந்த வழக்கு சுமார் 6 ஆண்டுகளாக நீடித்த நிலையில், விசாரணை நிறைவடைந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com