

சேலத்தில் மேம்பாலம் இருந்தும் ரயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடப்பதால் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. ஆபத்தை உணர்ந்தும் பொதுமக்கள் தண்டவாளம் வழியாக செல்வதால் சில சமயங்களில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்க நேரிடுவதாக குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்கள், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.