யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் யானை தாக்கி, உயிரிழந்த பாகன் காளியப்பன் உடலுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி
Published on
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் யானை தாக்கி, உயிரிழந்த பாகன் காளியப்பன் உடலுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து, காளியப்பன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, காளியப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வனத்துறை அதிகாரிகள், அவரது குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வனத்துறை அதிகாரி பெரியசாமி, காளியப்பனின் மனைவிக்கு அரசுவேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com