ஓராண்டிற்குள் எய்ம்ஸ் கட்டிட பணிகள் நிறைவடையும்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
ஓராண்டிற்குள் எய்ம்ஸ் கட்டிட பணிகள் நிறைவடையும்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Published on
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் 18 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் என்றும் தெரிவித்தார்,. மேலும், இன்னும் ஓராண்டிற்குள் எய்ம்ஸ் கட்டிட பணிகள் முழுமையாக முடிவடைந்து, மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்
X

Thanthi TV
www.thanthitv.com