"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது" - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது" - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
Published on

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். முகிலன் மீது ராஜேஸ்வரி என்பவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தன் மீதான பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.இந்த நிலையில், முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com