Rain | Tiruvallur | "பொளந்து கட்டும் கனமழை" ஸ்தம்பித்த பொன்னேரி!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை முதலே விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் பிற்பகலில் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, வல்லூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் வாகனங்களில் செல்வோர் அவதியடைந்துள்ளனர்.
Next Story
