Srivilliputhur | இணையத்தில் பரவிய அர்ச்சகர்கள் ஆபாசமாக ஆடிய வீடியோ - சஸ்பெண்ட்

x

இணையத்தில் பரவிய அர்ச்சகர்கள் ஆபாசமாக ஆடிய வீடியோ - சஸ்பெண்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர், கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அர்ச்சகர்கள் ஆகியோர் குடிபோதையில் ஆபாசமாக ஆடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், கும்பாபிஷேக பணிக்கு வந்த, பிற அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆபாசமாக ஆடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அர்ச்சகர் கோமதி விநாயகம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கும்பாபிஷேக பணியை பொறுப்பேற்று நடத்தி வரும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக, சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்ட சபரிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது. மறுபக்கம், ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாளிடம், இது குறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட வீடியோவில் குடிபோதையில் உள்ள அனைத்து அர்ச்சகர்களையும் கோயில் பணியில் இருந்து பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்