பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. கைதான 9 பேர் கொடுத்த வாக்குமூலம் - SI, டாக்டர் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் உறைவிட மருத்துவர் ஆகியோர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட 9 பேரிடம், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி வாக்குமூலம் பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக, எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கவுதம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் ராஜா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரிடமும் எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணை புதன்கிழமையும் தொடரும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Next Story