காப்பக நிர்வாகத்தினர் மீது பாய்ந்த போக்சோ - மாணவிகள் பொய் புகார்?-நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில், முறையான விசாரணை நடைபெறவில்லை என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. சம்மந்தப்பட்ட தனியார் காப்பகத்தில் 34 மாணவ, மாணவிகள் தங்கியிருந்த நிலையில், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக காப்பக உரிமையாளர், காப்பக பராமரிப்பாளர், வாகன ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் காப்பகத்தை சேர்ந்த மாணவிகள் , காதலித்து வந்ததாகவும் இதனை கண்டித்த காரணத்தால், காப்பக நிர்வாகத்தினர் மீது போலியான புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முழுமையான விசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com