கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோடை விழா : கரகாட்டம், ஒயிலாட்டம் என கோலாகலம்

நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை விழாவை ஒட்டி நடைபெற்ற கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்
கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோடை விழா : கரகாட்டம், ஒயிலாட்டம் என கோலாகலம்
Published on

நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை விழாவை ஒட்டி நடைபெற்ற கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். உதகையில்கோடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,கோடை விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் மலர் கண்காட்சியின் நான்காம் நாளில், தப்பாட்டம், கரகாட்டம், கருப்பசாமி, வீரபத்திரன் ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். உதகையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் "ஹெலி கேமரா " மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com