Ooty Protest | மூட்டைகளை வைத்து டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் - ஊட்டியில் பரபரப்பு

Ooty Protest | மூட்டைகளை வைத்து டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் - ஊட்டியில் பரபரப்பு

Ooty Protest | காலி மதுபாட்டில் மூட்டைகளை வைத்து டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் - ஊட்டியில் பரபரப்பு ஊட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக, காலி மது பாட்டில் மூட்டைகளை சாலையின் குறுக்கே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... முதலில் அந்த காட்சியை பார்க்கலாம். டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வரும் மது பிரியர்கள் வெளியில் நின்று பெண்கள் வரும் போது தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்... இந்நிலையில் அப்பகுதி மக்கள் சாலையின் நடுவே காலி மதுபான பாட்டில்களின் மூட்டைகளை வைத்து கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மக்களை சமாதானம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com