நடக்க முடியாத நிலையில்,கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியிடம், துணை ஆணையரே மனுவை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த 86 வயதான ரங்கம்மாள், புகார் அளிக்க ஆணையர் அலுவலகம் வந்தார். இதையறித்த காவலர்கள் துணை ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த துணை ஆணையர், நுழைவாயிலிலே மூதாட்டியிடம் மனுவை பெற்றுக்கொண்டார்