நீட் ஆள் மாறாட்டம் - 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீட் ஆள் மாறாட்டம் - 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
Published on
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்களால் ஜாமின் கேட்டு தொடரப்பட்ட வழக்கு, மூன்றாவது முறையாக தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள மாணவர் உதித் சூரியா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் வழங்காத நிலையில், இவர்களுக்கும் ஜாமின் வழங்க முகாந்தரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com