நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது, இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்..

X

Thanthi TV
www.thanthitv.com