பைக்கில் சென்ற நபரை வழிமறித்து பணத்தை பறித்த மர்ம கும்பல்.. வலைவீசி தேடும் போலீஸ்...

x

பள்ளிப்பட்டு அடுத்த சொராக்காய்பேட்டை பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், அரசு சார்பில் இயங்கி வரும் மணல் குவாரியில், புதுக்கோட்டையை சேர்ந்த முரளி என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். குவாரி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக, மணல் குவாரியில் இருந்து 24 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, முரளி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அருங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, திடீரென ஒரே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்தபடி வந்த 3 பேர், முரளியின் வாகனத்தை வழிமறித்து, அவரை தாக்கிவிட்டு பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்