செல்போன் டவரில் ஏறி மாநகராட்சி ஊழியர் போராட்டம்
நாமக்கல்லில் செல்போன் டவரில் ஏறி மாநகராட்சி ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி ஊழியர் பாபுவை கீழே இறங்க வைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தங்களுக்கு சம்பளம் போதவில்லை என்றும் சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
