அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளதா என ஆய்வுசெய்ய குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
Published on
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளதா என ஆய்வு செய்ய குழு அமைக்க கோரி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com