தமிழகத்தில் வேலையிழப்பும் வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உணர்த்துவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் அவர் விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறிகள் எனவும் தமிழக அரசு இதனை உணர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.