காரை மறித்து இளைஞர் கேள்வி.. அதை காங்கிரசுக்கு சாதகமாக்கி ஜோதிமணி போட்ட அரசியல் கோல்.. வைரல் வீடியோ..!

x

திண்டுக்கல் வேடசந்தூரில் கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரித்த போது இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையை முடித்து விட்டு ஜோதிமணி பிரச்சார வேனில் இருந்து இறங்கி புறப்பட சென்றார். அப்போது அவரை இடைமறித்த இளைஞர் ஒருவர் கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என வாக்குவாதம் செய்த நிலையில் ஜோதிமணி பதில் சொல்லாமல் வேகமாக காரில் ஏறினார். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கட்சி நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். தொடர்ந்து அவசர அவசரமாக செய்தியாளர்களை அழைத்த ஜோதிமணி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை நிலவுவது பிரதமர் மோடியின் பாஜக அரசால் தான் என தெரிவித்து விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்