

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா, தீபக் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தின் போது அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் அஞ்சலி செலுத்த வேண்டியுள்ளதால் வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.