இனி EMail, சமூக வலைத்தளங்களை வருமான வரித்துறை உளவு பார்க்குமா? யாருக்கு செக்..?
வரி செலுத்துவோரின் இ-மெயில், சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்ப்பதாக எழுந்த வதந்தியில், வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. உளவு பார்ப்பதற்காக கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறும் விவகாரத்தில் உண்மை இல்லை என வருமான வரித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நபர் தகவல்களை தர மறுத்தால் மட்டுமே அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும், சமூக வலைதள கணக்குகளை வேவு பார்க்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story
