Tiruppur | Bus Issue | அடாவடி செய்த டிரைவர், நடத்துனர் | கொதித்துப்போன பெண்கள்
Tiruppur | Bus Issue | அடாவடி செய்த டிரைவர், நடத்துனர் | கொதித்துப்போன பெண்கள் #tiruppur #busissue #Driver #conductor #thanthitv அரசு பேருந்தில் பெண்களுக்கு டிக்கெட் வழங்காமல் அலைக்கழித்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பெண்களை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமலும், பயணச்சீட்டு வழங்காமலும் அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற நகர பேருந்தில், ஹாஸ்டல் ஸ்டாப் நிறுத்தத்தில் ஏறிய பெண்கள், மெடிக்கல் ஸ்டாப்பில் இறக்குமாறு நடத்துனரிடம் கூறி பயணச்சீட்டு கேட்டுள்ளனர். அப்போது, "இரண்டு நிறுத்தம் தான் உள்ளது… நடந்து செல்ல முடியாதா? 500 ரூபாய் அபராதம் கட்டினால் தான் திருந்துவீர்கள்" என்று ஓட்டுநரும் நடத்துனரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கேட்ட நிறுத்தத்தில் இறக்காமல், பயணச்சீட்டு வழங்காமலும், பேருந்து நிலையத்திற்கே கொண்டு சென்று இறக்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
