ஒசூர் அருகே சாலைகளை கடந்து சென்ற பிரமாண்ட யானைக்கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி விட்டு அச்சத்துடன் வேடிக்கை பார்த்தனர். ஆலள்ளி வனப்பகுதியில் யானைக்கூட்டம் நுழைந்துள்ளதால், அந்த வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.