Kanyakumari Fishermen Issue| அடிதடி, திடீர் மோதல்.. போலீஸ் குவிப்பு.. ஓடிவந்த குமரி SP

விதிமீறி சென்ற படகுகளால் மீனவர்களிடையே திடீர் வாக்குவாதம் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விதிமுறைகளை மீறி ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், இரு தரப்பு மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com