கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Published on
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி, ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையின் போது நெடுஞ்சாலைத் துறை, ஈரோடு மாநகராட்சி, காவல்துறைக்கு இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com