அதிவேகத்தில் வந்த லாரி இடித்ததால்.. தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

பல்லடம் அருகே நடந்த சாலை விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவர் தனது பேரன் சாய்ஸ்ரீ என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். சமத்துவபுரம் அருகே வந்தபோது முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற நிலையில், சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. லாரி சக்கரத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்