Dharmapuri Rain | 1 மணி நேரம்.. கொளுத்திய வெயிலுக்கு ரெஸ்ட் விட்டு வெளுத்தெடுத்த ஆலங்கட்டி மழை
Dharmapuri Rain | Hailstorm | 1 மணி நேரம்.. கொளுத்திய வெயிலுக்கு ரெஸ்ட் விட்டு வெளுத்தெடுத்த ஆலங்கட்டி மழை
தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. 100 டிகிரி செல்சியஸைத் தாண்டிய கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த அரூர், செல்லம்பட்டி, தீர்த்தமலை பகுதி மக்களுக்கு இந்தத் திடீர் மழை மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது. பலத்த காற்றின் காரணமாக அரூர் - திருவண்ணாமலை நான்கு வழிச்சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துச் சற்று பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழை, அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
