Dharmapuri Old Women | "பல இடங்களில் ரத்த காயத்தோடு அட்மிட்-ஆன 80 வயது மூதாட்டி"

"பல இடங்களில் ரத்த காயத்தோடு அட்மிட்-ஆன 80 வயது மூதாட்டி"

Dharmapuri Old Women | "பல இடங்களில் ரத்த காயத்தோடு அட்மிட்-ஆன 80 வயது மூதாட்டி" தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை பகுதியில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தோட்டத்தில் நின்ற மூதாட்டியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற தாக்கியதாக கூறப்படுகிறது. மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர் ஓடி வந்ததால் அந்த மர்ம நபர் தப்பிச்சென்றதாகவும் தெரிகிறது. உடம்பில் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் கிராமத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com