Dharmapuri | Car Accident | நேருக்கு நேர் மோதிய கார் | ஒரே பைக்கில் சென்ற 3 பேருக்கு நேர்ந்த சோகம் | கதறும் உறவினர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதணி விழாவுக்கு சென்று திரும்பிய 3 பேர் கார் மோதி பலி காதணி விழாவுக்கு சென்று திரும்பிய 3 பேர் கார் மோதி பலியான சோகம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து பைக்கில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதணி விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாச்சாத்தியை சேர்ந்த பழனி, பரமசிவம், குமார் ஆகியோர் மஞ்சவாடியில் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற காதணி விழாவுக்கு சென்றுவிட்டு ஒரே பைக்கில் வீடு திருபியுள்ளனர். சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் கோம்பூர் பகுதியில் சென்றபோது பைக் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
