காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபேர்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.கடந்த மூன்று நாட்களாக வைகாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இன்று மழையை வேண்டி கோயில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் நடத்தப்பட்டது. சில பக்தர்கள் அலகு குத்தியும் சாடல் குத்திக்கொண்டு ராட்டினத்தில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.