பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை
Published on

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக்கடை அருகே பெட்டி கடை நடத்தி வரும் மாரிமுத்து டாஸ்மாக் பாட்டில்களை தன்னுடைய பெட்டி கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பெட்டி கடையில் சோதனை செய்தபோது 147 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 147 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com