

கோவை மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் மாநகராட்சி ஒன்றிணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் பல வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளிலும், அரசு அலுவலக கட்டிடங்களிலும், பல வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. ஓவியங்கள் தமிழ் தலைப்புகளுடன், மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் அழகுடன் காட்சியளிக்கிறது.