பாஜகவுடன் கூட்டணி வைப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல - திருமாவளவன்

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின் திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிட போவதாக கூறிய திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது திமுக தலைமையில் மட்டும்தான் கூட்டணி அமைந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com