Chengalpattu | லாரி டயரில் சிக்கி வலியில் துடித்த நபர் - நொடியில் நடந்த பயங்கரம் - பகீர் CCTV
லாரி டயரில் சிக்கி வலியில் துடித்த நபர் - நொடியில் நடந்த பயங்கரம் - பகீர் CCTV
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் முன்னூர் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி, சூனாம்பேட்டிலிருந்து மதுராந்தகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. பின்னால் வந்த கல்குவாரி லாரி மோதியதில், லூர்துசாமி லாரியின் டயரில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
