சென்னையில் இருந்து சென்ற கார் கோர விபத்து - பறிபோன 4 உயிர்கள்
தஞ்சாவூரில் கோர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
சரக்கு வாகனமும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த கார் மீது , எதிரே வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த குமார், துர்கா, நிலவேலி சூர்யா ஆகிய மூவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகிய மூன்று பேர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
