பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டைகள் : போக்குவரத்துத்துறை புதிய அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகளை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டைகள் : போக்குவரத்துத்துறை புதிய அறிவிப்பு
Published on
கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகளை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புதிய இலவச பேருந்து அட்டைகள் வழங்கும் வரை, இந்த பழையை அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடை அணிந்து பயணித்தாலே டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com