Bus | Accident | திடீரென பஸ் மீது வேரோடு முறிந்து விழுந்த மரம் - உள்ளே இருந்த மாணவர்கள் நிலை?
Bus | Accident | திடீரென பஸ் மீது வேரோடு முறிந்து விழுந்த மரம் - உள்ளே இருந்த மாணவர்கள் நிலை?
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ராட்சத புளியமரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. மாரண்டஹள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை அழைத்து வர பாலக்கோடு பணிமனையிலிருந்து அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்து உப்பப்பள்ளம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் திடீரென வேரோடு முறிந்து பேருந்தின் மீது விழுந்தது. அப்போது பேருந்தில் பயணிகள் மற்றும் மாணவர்கள் குறைவாக இருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி மற்றும் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்தன. . இந்த விபத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
