#BREAKING || திடீரென நின்ற சென்னை மெட்ரோ - ஸ்தம்பித்துப்போன மக்கள்

x

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு காரணமாக சென்னை ஆலந்தூரில், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்போம்..

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்ணா சாலை வழியாக மின்கோனார் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வடபழனி வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும் மெட்ரோ ரயில் சேவைகளும் 15 முதல் 20 நிமிடம் வரை தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டு வழித்தடங்களிலும் செல்லும் பயணிகள் ரயில் இயக்க சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டமாக நடைமேடைகளில் காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்